கஜேந்திர மோக்ஷம்
கஜேந்திர மோக்ஷம் : குறையொன்றுமில்லை.. முக்கூர் லக்ஷ்மி நரஸிம்மாச்சாரியார். ஜலத்திலே இருக்கிற பரமாத்மா பிரணவ ஸ்வரூபியானவன். ஓம்காரமாக இருக்கிறான். அப்படிப்பட்டவனுக்கே நான் உரியவன் என்று (நம:) நாம் நம்மை அர்ப்பணிக்க வேண்டும். 'நம' வென்னலாம் கடமை' - திருவேங்கடத்திலே இருக்கிறானே அவனெதிரில் போய் 'நம' என்று சொல் என்கிறார் ஆழ்வார்! நம: என்று நாம் சொல்லும் போது 'நான் எனக்கே உரியவன்' என்கிற நிலையை அது அகற்றுகிறது. நாமே நமக்கு ரக்ஷகர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோமல்லவா..? நமக்கு நம்மை ரக்ஷித்துக் கொள்ளும் சக்தியுள்ளதாக நினைத்துக் கொள்கிறோமே - இந்த அறிவைப் போக்குகிறது நம: யானையை முதலை பிடித்து தண்ணீருக்குள் இழுக்கிறது. யானையோ கரைப்பக்கம் இழுக்கிறது. இப்படி இரண்டும் சண்டை போடுகிற காட்சியை சுக பிரும்ம மஹரிஷி விவரிக்கிறார். பரீக்ஷித் அதைக் கேட்டுக் கொண்டிருக்கிறான்! விஷ்ணு தர்மத்திலே வருகிற ஸ்லோகம் அது.. விஷ்ணு தர்மம் என்று ஒரு கிரந்தம் - விஷ்ணு புராணம் மாதிரி. பரீக்ஷித்துக்குச் சந்தேகம் ஏற்படுகிறது. 'சுவாமி..! இப்படியே எத்தனை நாள் தான் ஒன்றை ஒன்று இழுத்தது..?