ஊக்கம்

ஊக்கம் :

வாழ்க்கையில் சின்ன சின்ன மகிழ்ச்சியை இழந்தவர்களுக்குதான் தெரியும்.. பாசம் எவ்வளவு பெரிய பொக்கிஷம் என்று....!!!

ஒவ்வொரு முறையும் எதிர்பார்த்தே தோற்றுப் போகிறேன்... என்றாவது ஒரு நாள் தோல்வியும் என்னிடத்தில் துவண்டு போகும் என்ற நம்பிக்கையில்... !

ஈரம் இருக்கும் வரை இலைகள் உதிர்வதில்லை.. நம்பிக்கை இருக்கும் வரை முயற்சிகள் வீண்போவதில்லை.!

இனிமேல் இழக்க ஒன்றுமில்லை என்ற நிலைக்கு வந்துவிட்டால் புன்னகை செய்யுங்கள். அதன் அடுத்த நிலை வெற்றிதான்... !

மற்றவர்களைப் பார்த்து நீங்கள் அவர்களைப் போல் வாழ்ந்தால் உங்களைப் போல் யார் வாழ்வது...? ஆகவே நீங்கள் நீங்களாகவே இருங்கள்...!

வெற்றி பெறுகிறவனின் ஒரே மந்திரச்சொல் "இப்பொழுது". தோல்வி அடைகிறவனின் ஒரே சாபச்சொல் "பிறகு". வெற்றி பெற்றே தீர வேண்டும். எனவே எதையும் தள்ளிப் போடாதிர்கள்.

பிரச்னைகள் தாம் மிகப்பெரிய சாதனைகளையும், உறுதிமிக்க சாதனையாளர்களையும் உருவாக்குகின்றன. எனவே பிரச்னைகளை விருப்பத்துடன் எதிர்கொள்ளுங்கள்.

தோல்வி எனக்கு மனச்சோர்வை அளிப்பதில்லை. மாறாக அது என்னை மேலும் மேலும் ஊக்குவிக்கிறது. எவ்வளவுதான் கல்வியும், செல்வமும் இருந்தாலும் ஒருவனால் வெற்றி பெறமுடியாது. தோல்விகளைக் கண்டு அஞ்சாமல் தொடர்ந்து முயற்சி செய்யும் ஊக்கம் அவனிடம் இருந்தால்தான் முன்னேற முடியும், வெற்றி பெற முடியும்.

இந்த ஊக்கம் இருந்தால், கல்வியறிவு இல்லாதவனும், பொருள்வசதி இல்லாதவனும் கூட முன்னேறுவது உறுதி.

Comments

Popular posts from this blog

இது 'தான்' வாழ்க்கை

நம்பிக்கை தான்

வெற்றிகரமான வாழ்க்கைக்கு பத்து சூத்திரங்கள்