வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன் : வாழ்க வளமுடன் - என்பது எதைக்குறிக்கிறது...? வாழ்க என்பது வாழ்த்துச்சொல். வளமுடன் என்பது ஒரு நிறைவுத்தன்மையை குறிக்கும். வாழ்க வளமுடன் என்று ஒருவர் வாழ்த்தினால் நிறைவுத்தன்மையுடன் வாழ்க என்று ஒருவர் வாழ்த்துகிறார் என்று அர்த்தம். ஒருவன் எப்போது நிறைவுத்தன்மை அடையமுடியும்? தேவைகள் பூர்த்தியடையும்போது நிறைவுத்தன்மை ஏற்படும். தேவைகளை எப்படி பட்டியலிடுவது...? மனிதனின் பொதுவான தேவையை எளிதாக பட்டியலிட்டு விடலாம். ஒருவன் மகிழ்ச்சியாக வாழ ஐந்து தேவைகள் முக்கியம். 1) உடல் நலம் 2) நீளாயுள் 3) நிறைசெல்வம் 4) உயர்புகழ் 5) மெய்ஞானம் இந்த ஐந்தையும் உணர்ந்து அனுபவித்து கடந்து வாழும் வாழ்க்கைதான் முழுமையான வாழ்க்கை. உலகின் எல்லா இன்பங்களும் இந்த ஐந்தில் அடங்கிவிடும். "வாழ்க வளமுடன்" என்று ஒருவர் உச்சரித்து வாழ்த்தும்போது, நீங்கள் இந்த ஐந்து செல்வங்களையும் பெற்றுவாழுங்கள் என்று வாழ்த்துகிறார். இது வெறும் வார்த்தை ஜாலமல்ல ! இதனூடே ஒரு ஆழமான உளவியல் தன்மை ஒளிந்து இருக்கிறது. அடுத்து இதன்பின் ஒரு அறிவியல் தன்மாற்றமும் இருக்கிறது. அது என்ன....? "வாழ்க வளமுடன்" என்று இ...